கோவை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோவை கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து கோவை கிணத்துக்கடவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்றவற்றை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட 61 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் DL.சிங், முன்னாள் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணம்மாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு, தண்டபாணி, மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்த நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்றவற்றை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட 61 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் DL.சிங், முன்னாள் நகர செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணம்மாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் லட்சுமணன், நகரத் துணைச் செயலாளர் பிரபு, தண்டபாணி, மாரிமுத்து உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கலந்து கொண்டவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.