தென்னை நார் உற்பத்திக்கு கூடுதல் மானியம் வழங்கினால் ஏற்றுமதியை அதிகரிக்கலாம்- உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

கோவை: பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக தென்னை நார் உற்பத்தி நிறுத்தத்தால், மழைக்காலங்களில் பயன்படுத்தும் நவீன உலர் கலங்கள், மானிய விலையில் வழங்க அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பொள்ளாச்சியில் தொடர் மழை காரணமாக தென்னை நார் உற்பத்தி நிறுத்தத்தால், மழைக்காலங்களில் பயன்படுத்தும் நவீன உலர் கலங்கள், மானிய விலையில் வழங்க அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் உலர் களங்களில் ஈரப்பதம் ஏற்பட்டு உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-



பொள்ளாச்சியில், உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது வெளிநாட்டு ஏற்றுமதி விலை குறைந்த காரணத்தாலும், ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டதால், சுமார் 500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்காலங்களில் உற்பத்தியை நிறுத்தாமல் தொழிலை செய்ய, மத்திய, மாநில அரசாங்கங்கள் நவீன உலர் களங்களை மானிய விலையில் வழங்கி, தொழிலை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...