திருப்பூரில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலார்பட்டியில் எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, திருப்பூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கோலார்பட்டியில் எம்.எல்.ஏ. உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி உடுமலை ரோடு கோலார்பட்டியில், அதிமுக திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில், உடுமலை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அப்போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உதவித்தொகை 1000, மேலும் அதிமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தேர்தலின் போது திமுக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், பொது மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டிய உடுமலை ராதாகிருஷ்ணன், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...