கோவை: BSNL- ஐ காக்க இந்திய நாடு முழுவதும் நடைபெறக்கூடிய AUAB-யின் அறைகூவலான (28-07-2021) இன்று உண்ணாவிரத போராட்டம் கோவை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
கோவை: BSNL- ஐ காக்க இந்திய நாடு முழுவதும் நடைபெறக்கூடிய AUAB-யின் அறைகூவலான (28-07-2021) இன்று உண்ணாவிரத போராட்டம் கோவை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
இதுகுறித்த கோரிக்கைகள்:-
1 BTS-களை மேம்படுத்துவதன் மூலம், உடனடியாக 4G சேவையினை BSNL நிறுவனம் துவங்க வேண்டும். 5G சேவைகளை துவக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
2. ஓவ்வொரு மாதமும் மாதத்தின் கடை நாளன்று ஊதியம் வழங்க வேண்டும்.
3. இந்திய அரசாங்கம்/ நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ள படி BSNL டன் ஆப்டிக் ஃபைபர் மற்றும் டவர்களை பணமாக்க முயற்சிக்க கூடாது.
4. BSNL நிறுவனத்துற்கு DOT வழங்க வேண்டிய 39,000 கோடி ரூபாய்களை உடனடியாக வழங்க வேண்டும்.
5. காலியாக உள்ள நிலங்களை பணமாக்குவதன் மூலம், BSNL டன் கடன்களை திருப்பி கட்ட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
6. க்ளஸ்டர் முறையிலான அவுட்சோர்சிங் முறையை முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
7. 3 வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 % ஓய்வு கால பலன்கள் ஆகியவற்றை உடனடியாக தீர்வு காண வேண்டும்.
8. BSNLடன் FTTH சேவையின் தரத்தை மேம்படுத்த, வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
9. BTS களை முறையாக பராமரிக்க வேண்டும், பவர் ப்ளேண்ட்களை முறையாக பராமரிக்க வேண்டும்: பேட்டரிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும்.
10. TRANSMISSION NETWORK பலப்படுத்த வேண்டும்.
இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் பலர் பங்கேற்றனர்.