கோவை: கஞ்சா, போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகளுடன் கையும் களவுமாகச் சிக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கஞ்சா, போதை ஊசிகள் மற்றும்மாத்திரைகளுடன் கையும் களவுமாகச் சிக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் முன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் வலி நிவாரண மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் செலுத்தி அதை உடலில் செலுத்தும் வீடியோ கோவை நகர் உட்பட தமிழ்நாடு முழுவதும் அந்த வீடியோ வைரலாக பரவியது.
அதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் ஆங்காங்கே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
அதை தொடர்ந்து அதை இளைஞர்கள் வாங்கி அதை தண்ணீரில் கரைத்து உடலில் செலுத்தி போதை அனுபவித்து வருகின்றன. தடுப்பதற்கு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தாலும் அது குறைந்தபாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக வலிநிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து சிரஞ்சி மூலம் செலுத்தி போதை அடையும் புதிய பழக்கத்தை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கோவை மாநகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற போதைப் பொருட்களை விற்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒண்டிபுதூர் பகுதியில் காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் முத்துக்குமார் (21) ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன் (21) மற்றும் ஒண்டிப்புதூர் வள்ளலார் அடுக்குமாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ராஜா என்கிற இஸ்ரவேல் (21) ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வலி நிவாரணி போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் முன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உக்கடம் பகுதியில் வலி நிவாரண மாத்திரை மற்றும் போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் செலுத்தி அதை உடலில் செலுத்தும் வீடியோ கோவை நகர் உட்பட தமிழ்நாடு முழுவதும் அந்த வீடியோ வைரலாக பரவியது.
அதை தொடர்ந்து போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் ஆங்காங்கே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது.
அதை தொடர்ந்து அதை இளைஞர்கள் வாங்கி அதை தண்ணீரில் கரைத்து உடலில் செலுத்தி போதை அனுபவித்து வருகின்றன. தடுப்பதற்கு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருந்தாலும் அது குறைந்தபாடு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அதுவும் குறிப்பாக வலிநிவாரணி மாத்திரைகளைத் தண்ணீரில் கலந்து சிரஞ்சி மூலம் செலுத்தி போதை அடையும் புதிய பழக்கத்தை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கோவை மாநகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற போதைப் பொருட்களை விற்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒண்டிபுதூர் பகுதியில் காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை விசாரித்தனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் முத்துக்குமார் (21) ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன் (21) மற்றும் ஒண்டிப்புதூர் வள்ளலார் அடுக்குமாடிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ராஜா என்கிற இஸ்ரவேல் (21) ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வலி நிவாரணி போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.