கோவை - கேரளா எல்லை சோதனை சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல்!

கோவை: கோவை - கேரளா எல்லை வாளையாறு வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை - கேரளா எல்லை வாளையாறு வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் கேரளா லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை - கேரளா எல்லையான வாளையாறு கேரளா பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் கோவை வழியாகச் செல்லும் வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பப்படும். குறிப்பாக அதிகளவு இயந்திரங்கள், காய்கறி, முட்டை லோடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோவை வழியாக கேரளா செல்லும் வாகன ஓட்டிகளிடமிருந்து ஆவணம் முறையாக இருந்தாலும், லஞ்சம் வாங்கப்படுவதாக கேரளா லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் அங்கு கேரள லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் பெற்று கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். இதில் அரசுக்கு ரூ.2.50 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும், கணக்கில் வராத ரூ.1.75 லட்சம் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாலை 4 மணியளவில் சோதனை நிறைவடைந்த நிலையில் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மோகனசுந்தரத்தை கைது செய்தனர்.

மேலும், வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த அரசு ஊழியர்களுக்கு சம்மன் வழங்கிச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...