கோவை காந்தி பார்க் ரவுண்டானாவில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் திருஉருவச்சிலை அமைக்க கோரிக்கை..!

கோவை: செம்மொழி மாநாடு நடத்தி கோவைக்கு பெருமை சேர்த்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு காந்தி பார்க் ரவுண்டானாவில் திருஉருவச்சிலை அமைக்க வேண்டும் என கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: செம்மொழி மாநாடு நடத்தி கோவைக்கு பெருமை சேர்த்த முத்தமிழறிஞர் கலைஞருக்கு காந்தி பார்க் ரவுண்டானாவில் திருஉருவச்சிலை அமைக்க வேண்டும் என கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை எழுந்துள்ளது.



பாரம்பரிய நகைத்தொழில் புரியம் விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு, இந்து அறநிலையத்துறை கீழ் வரும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலர் குழுவில் (தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல) இடம் பெறச்செய்து ஆவணம் பிறப்பிக்க உள்ள நிலையில், மேலும், தங்க தாலிகள்(மாங்கல்யம்) செய்ய பொற்கொல்லர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தை சார்ந்த பாரம்பரிய நகை கடைக்காரர்களுக்கு மட்டுமே தயாரித்து, விற்பனை செய்ய உரிமம் மாநில அளவில் வழங்கப்படவேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகள் முன்னிட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தியை மரியாதையை நிமித்தமாக கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர், S.ராகுநாதன் சுப்பையயா(SR) சந்தித்தார்.

அச்சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததோடு, கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி கோவைக்கு பெருமை சேர்த்ததோடு, தமது ஆட்சிக்காலத்தில் கோவைக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி முன்னேற்ற முன்னெடுப்பை எடுத்து செயல்படுத்திய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு காந்திபார்க் ரவுண்டானாவில் திருஉருவச்சிலை அமைக்க வேண்டும் எனவும் கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

கூட்டமைப்பு சார்பாக முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி நம்பிக்கையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் செயலாளர் B.தண்டபாணி மற்றும் சான்றிதழ் பெற்ற பொற்பணியாளர்கள் நிர்வாகிகள் கனகசபாபதி, மாணிக்கவாசகம், தேவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...