பொள்ளாச்சி அருகே காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது!

கோவை: பொள்ளாச்சி அருகே காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே காரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரளா மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட 21 பைகளில் இருந்த 1050 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சரவணன், சுபாஷ் உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...