கோவை: கோவையில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவையில் சாலை ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி மீது கார் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் வரதராஜ்(57). இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதா ஹால் சாலையில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் ஓரமாக படுத்திருந்த ஊனமுற்ற நபர் மீது கார் வேகமாக மோதியது. இதில் அந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து வரதராஜ் காயமடைந்த நபரை தனது காரில் எடுத்துக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் விபத்தில் இறந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து பிச்சை எடுத்து வரும் ஊனமுற்ற நபர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்து வரதராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் வரதராஜ்(57). இவர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதா ஹால் சாலையில் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் ஓரமாக படுத்திருந்த ஊனமுற்ற நபர் மீது கார் வேகமாக மோதியது. இதில் அந்த நபர் படுகாயமடைந்தார். இதையடுத்து வரதராஜ் காயமடைந்த நபரை தனது காரில் எடுத்துக் கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கார் விபத்தில் இறந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்து பிச்சை எடுத்து வரும் ஊனமுற்ற நபர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்து வரதராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.