கோவை: கோவை சூலூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 150 லிட்டர் சாராயம், அடுப்பு குக்கர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை சூலூர் அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய அதிமுக பிரமுகரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 150 லிட்டர் சாராயம், அடுப்பு குக்கர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சூலூர் அருகே சுல்தான்பேட்டை வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (36) அதிமுக பேச்சாளராக உள்ளார். வீட்டில் கைத்தறி வைத்து தொழில் செய்து வந்த இவர், தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை காமநாயக்கன்பாளையம் எஸ்.ஐ சம்பத் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சுந்தரராஜ் அந்த வழியாக பைக்கில் வந்தார். அவரது வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுந்தர்ராஜனை நிறுத்தி விசாரித்தபோது, சுந்தர்ராஜ் பைக்கில் 6 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தர்ராஜ் சுல்தான் பேட்டையில் உள்ள தனது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் சுல்தான் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ரவி தலைமையிலான போலீசார் சுந்தரராஜ் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு குக்கரில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் ஊரல் 4 லிட்டர் கள்ளச்சாராயம் சாராயம் தயாரிப்பதற்கான பொருட்களான சர்க்கரை, பேரீச்சம்பழம், படிகாரக்கல், அடுப்புக்கரி, உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சுந்தரராஜ் கைது செய்யப்பட்டார். வீட்டில் சாராயம் காய்ச்ச உதவியாக இருந்த அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே சுல்தான்பேட்டை வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (36) அதிமுக பேச்சாளராக உள்ளார். வீட்டில் கைத்தறி வைத்து தொழில் செய்து வந்த இவர், தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை காமநாயக்கன்பாளையம் எஸ்.ஐ சம்பத் பல்லடம் பொள்ளாச்சி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சுந்தரராஜ் அந்த வழியாக பைக்கில் வந்தார். அவரது வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுந்தர்ராஜனை நிறுத்தி விசாரித்தபோது, சுந்தர்ராஜ் பைக்கில் 6 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சுந்தர்ராஜ் சுல்தான் பேட்டையில் உள்ள தனது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் சுல்தான் பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ரவி தலைமையிலான போலீசார் சுந்தரராஜ் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு குக்கரில் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.
மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் ஊரல் 4 லிட்டர் கள்ளச்சாராயம் சாராயம் தயாரிப்பதற்கான பொருட்களான சர்க்கரை, பேரீச்சம்பழம், படிகாரக்கல், அடுப்புக்கரி, உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சுந்தரராஜ் கைது செய்யப்பட்டார். வீட்டில் சாராயம் காய்ச்ச உதவியாக இருந்த அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.