கோவை: கிணத்துக்கடவில் அனுமதியில்லாமல் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவில் அனுமதியில்லாமல் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழிவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொண்ணாயாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று மாலை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் காவல்துறை அனுமதி இல்லாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கொரோனா பரவல் ஏதுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மாவட்ட பொதுச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட 47 பேர் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழிவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொண்ணாயாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று மாலை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் காவல்துறை அனுமதி இல்லாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கொரோனா பரவல் ஏதுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மாவட்ட பொதுச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட 47 பேர் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.