பொள்ளாச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு... சீட்டு நிறுவனரை தாக்கிய வாலிபர் கைது..!

கோவை: பொள்ளாச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தவரை தாக்கிய வாலிபர் கைது.


கோவை: பொள்ளாச்சி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தவரை தாக்கிய வாலிபர் கைது.

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இதயராஜ்(31). இவர் தனது வீட்டிலேயே சிறிய அளவில் சீட்டு நடத்தி வருகிறார். இந்தநிலையில், பொள்ளாச்சி பல்லடம் ரோடு பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி திலகவதி 1 லட்ச ரூபாய் சீட்டு மூலம் பணம் வாங்கியதாகத் தெரிகிறது. இதில் 5 ஆயிரம் ரூபாயை மட்டும் திலகவதி திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் மீதமுள்ள 5 ஆயிரம் ரூபாயைத் திருப்பித் தராமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து இதயராஜ் பலமுறை கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில், இன்று இதயராஜ் பணத்தைத் திருப்பிக் கேட்ட பொழுது திலகவதியின் மகன் சிவராஜ்(35) இதயராஜை தகாத வார்த்தைகளைப் பேசியதோடு கைகளால் தாக்கியுள்ளார். இதுகுறித்து இதயராஜ் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸார் சிவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....