கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகராட்சி இடத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சியினர் சார்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்வதற்காக, நகராட்சி இடத்தில் உள்ள தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சியினர் சார்பாக, பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்காக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை கையகப்படுத்தி தற்போது பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவமனை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகிறது.

அரசு மருத்துமனை விரிவாக்கப் பணிகளுக்காக நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் அந்த தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்தி, அதில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளை நடத்தக் கோரி, இன்று மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு சொந்தமாக உள்ள இடத்தில், செயல்பட்டு வரும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை அப்புறப்படுத்தி, மருத்துவமனை விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இதற்காக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை கையகப்படுத்தி தற்போது பிரமாண்ட கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், மருத்துவமனை அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகிறது.
அரசு மருத்துமனை விரிவாக்கப் பணிகளுக்காக நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் அந்த தனியார் ஜவுளிக் கடையை அப்புறப்படுத்தி, அதில் மருத்துவமனை விரிவாக்கப் பணிகளை நடத்தக் கோரி, இன்று மதிமுக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதேபோல, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு சொந்தமாக உள்ள இடத்தில், செயல்பட்டு வரும் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை அப்புறப்படுத்தி, மருத்துவமனை விரிவாக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.