திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு..!

கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட அலுவலகத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள, பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட அலுவலகத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது.



பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், திருமூர்த்தி அணை பாசனம் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்தநிலையில், திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து, ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள, பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்பொறியாளர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திருமூர்த்தி அணை பாசன சபை தலைவர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் என பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.



தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வரும் நிலையில், அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர். மேலும், இந்த முறை 4ஆம் மன்டல பாசனத்திற்கு ஐந்து சுற்றுகள் வரை தண்ணீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் திறப்பதைத் தொடர்ந்து, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...