கனமழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சார் ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர் ஆய்வு!

கோவை: வால்பாறை பகுதியில் சார் ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தனர்.


கோவை: வால்பாறை பகுதியில் கனமழை பாதிப்புகள் சார் ஆட்சியர் மற்றும் பயிற்சி ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இரண்டு நாளாக தீவிரமடைந்து வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லார் அணை, நீரார் அணை ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி சோலையாறு அணை நீர் மட்டம் உயர்ந்துமுழுமை அடைந்தது.

மழையின் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மழையால் பாதிப்புகள் உள்ளனவா என்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாப்பது குறித்துபொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் நான்தேவு ராவ் மற்றும் பயிற்சி ஆட்சியாளர் சரண்யா அவர்கள் ஆய்வு செய்தனர்.

வால்பாறை உள்ள அரசுமருத்துவமனை மற்றும் பிரசவ மருத்துவமனையும் ஆய்வு செய்து அங்குள்ள தேவைகளை கேட்டு அறிந்தனர். மருத்துவமனைக்கு இரத்த வங்கி, ஆப்ரேஷன் தியேட்டர்உள்ள மருத்துவர்கள் ரேடியாலஜிஸ்ட் மருத்துவமனைக்கு சமையாளர்கள் சுகாதார ஊழியர்கள் இரவு காவலர்கள் மருத்துவமனையில் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் சிரமப்படுவதாகவும் தெரிவித்தனர்.

பின்பு வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தயார்நிலை உள்ளதையும், அங்கு கழிவறை தண்ணீர் வசதி மின்சார வசதி போன்றவைகள் உள்ளதா என்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டனர்.

வால்பாறை அரசு பேருந்துபணி மனை பகுதியில்,ஒவ்வொரு வருடமும் வாழைத்தோட்ட ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து பணிமனை பகுதியில் தண்ணீர் நுழைந்து விடும் அப்பகுதிக்கு வெள்ளப் பெருக்கைத் தடுக்க நடவடிக்கையை ஆய்வு செய்தனர்.



வால்பாறை அருகே அனலி எஸ்டேட் பகுதிக்குச் செல்லும்வழியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் தரைப்பாலத்தில் தண்ணீர் நிரம்பி விடும் பொது மக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதையும்ஆய்வு செய்தனர்.

பின் சோலையார் அணை நேற்று அதன் முழு கொள்ளளவு தண்ணீர் நிரம்பி தண்ணீர் மதகு வழியாக வெளியேற்றினர். அப்பகுதியைச் சென்று அணையைப் பார்வையிட்டனர். வால்பாறை வாட்டச்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி விஜய் அமுர்தராஜ் ஆகியோர்கள் ஆய்விலிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...