கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை புறநகர் பகுதிகளில் ஒரே நாளில் 852 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநகாரத்தினம் இ.கா.ப., அவர்களின் அதிரடி உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி மற்றும் பொள்ளாச்சி உட்கோட்ட பகுதிகளில் காவல்துறையினர் நேற்று (23.07.2021) நடத்திய அதிரடி சோதனையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 390 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த ஹீரராம் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 132 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த 1)சாதிக் 2)குணசேகரன் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலைய பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக 330 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்த 1)நரேன்லால், 2)அஜ்பரன் ஆகியோர்களை கைது செய்து மேற்படி வழக்குகளில் அவர்களிடமிருந்து மொத்தம் 852 கிலோ கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...