கோவை: இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று முதல் அலை பரவலுக்குப் பின் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
மீண்டும் சகஜ நிலைமை திரும்புவதற்கு முன் இரண்டாவது அலை நோய்த்தொற்று பரவல் தொடங்கியது. இதனால் மீண்டும் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மே மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மாறி உள்ளது. தினமும் 11 விமானங்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ‘ஏர் அரேபியா' நிறுவனம் சர்வீஸ் வழங்கி வருகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், ‘‘கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 28 ஆயிரத்து 53 பேர். சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் 539 பேர்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று முதல் அலை பரவலுக்குப் பின் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
மீண்டும் சகஜ நிலைமை திரும்புவதற்கு முன் இரண்டாவது அலை நோய்த்தொற்று பரவல் தொடங்கியது. இதனால் மீண்டும் கோவை விமான நிலையத்தில் இயக்கப்படும் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. மே மாதத்தில் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நிலைமை சற்று மாறி உள்ளது. தினமும் 11 விமானங்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, டில்லி, பூனே, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ‘ஏர் அரேபியா' நிறுவனம் சர்வீஸ் வழங்கி வருகிறது.
இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் வெளியிட்டுள்ள விமான நிலையங்களின் மாதாந்திர செயல்பாடு குறித்த அறிவிப்பில், ‘‘கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஜூனில் மொத்தம் 29 ஆயிரத்து 42 பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 28 ஆயிரத்து 53 பேர். சர்வதேச விமான போக்குவரத்து பிரிவில் 539 பேர்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.