கோவை: ஆடி தபசு உட்பட முக்கிய இந்துக்கள் நிகழ்வுகளில் ஆலயங்கள் திறக்க அனுமதி மறுக்கும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கோவை: ஆடி தபசு உட்பட முக்கிய இந்துக்கள் நிகழ்வுகளில் ஆலயங்கள் திறக்க அனுமதி மறுக்கும் தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"ஆடி மாதம் இந்துக்களின் ஆன்மீக வழக்கங்களில் மிக முக்கியமான மாதம். ஆடி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றுவது உட்பட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதேபோல் 'சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழாவும் தென்காசி சங்கர நாராயணன் கோவில் உட்படப் பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து விழாக்களும் ஆன்மீகத்துடன் அறிவியலும் சம்பந்தப்பட்டது. ஆடி மாதம் காற்றுக் காலம் என்பதால் கிருமிகள் அதிகம் பரவும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அம்மன் வழிபாடு மூலமாக வேப்பிலை, மஞ்சள் ஆகிய கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.
ஆனால் தற்போது எந்தப் பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி கொடுக்காமல் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. சில மாவட்டங்களில் ஆட்சியர்கள் கூழ் ஊற்றக்கூடாது எனவும், ஆடித் தபசு கொண்டாடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இது போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் தான் மக்களின் மனதில் நோய் பற்றிய பயத்தைப் போக்கி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தையும் காக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் அரசு மறுப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. கூட்டம் கூடி தொழுகை செய்யும் பக்ரீத் பண்டிகை போக்குவரத்து நிறைந்த நட்ட நடு சாலைகளில் நடந்துள்ளது. பல பத்திரிகைகளில் செய்தியும் வந்துள்ளது.
இவற்றுக்கு அனுமதி கொடுக்கும் அரசு, வரிசையில் தனித் தனியாகச் சென்று சாமி கும்பிடுவதற்குக் கோவிலைத் திறக்க கொரோனாவை காரணம் காட்டி மறுப்பதுபாரபட்சமான செயல். அரசின் இந்த போக்கு இந்துக்களுக்கு விரோதமானதாக மக்கள் கருதக்கூடிய வகையில் உள்ளது.
இந்தச் செயலை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு உண்மையான மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறது என்றால் இந்து ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும்.
இல்லையெனில் மக்களின் மிகுந்த வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"ஆடி மாதம் இந்துக்களின் ஆன்மீக வழக்கங்களில் மிக முக்கியமான மாதம். ஆடி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் குறிப்பாக அம்மன் ஆலயங்களில் கூழ் ஊற்றுவது உட்பட பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதேபோல் 'சிவனும், விஷ்ணுவும் ஒன்று' என்ற ஒப்பற்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆடித்தபசு திருவிழாவும் தென்காசி சங்கர நாராயணன் கோவில் உட்படப் பல கோவில்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த அனைத்து விழாக்களும் ஆன்மீகத்துடன் அறிவியலும் சம்பந்தப்பட்டது. ஆடி மாதம் காற்றுக் காலம் என்பதால் கிருமிகள் அதிகம் பரவும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அம்மன் வழிபாடு மூலமாக வேப்பிலை, மஞ்சள் ஆகிய கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டனர்.
ஆனால் தற்போது எந்தப் பண்டிகைகளையும் கொண்டாட அனுமதி கொடுக்காமல் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. சில மாவட்டங்களில் ஆட்சியர்கள் கூழ் ஊற்றக்கூடாது எனவும், ஆடித் தபசு கொண்டாடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
இது போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் தான் மக்களின் மனதில் நோய் பற்றிய பயத்தைப் போக்கி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தையும் காக்கும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் அரசு மறுப்பது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது. கூட்டம் கூடி தொழுகை செய்யும் பக்ரீத் பண்டிகை போக்குவரத்து நிறைந்த நட்ட நடு சாலைகளில் நடந்துள்ளது. பல பத்திரிகைகளில் செய்தியும் வந்துள்ளது.
இவற்றுக்கு அனுமதி கொடுக்கும் அரசு, வரிசையில் தனித் தனியாகச் சென்று சாமி கும்பிடுவதற்குக் கோவிலைத் திறக்க கொரோனாவை காரணம் காட்டி மறுப்பதுபாரபட்சமான செயல். அரசின் இந்த போக்கு இந்துக்களுக்கு விரோதமானதாக மக்கள் கருதக்கூடிய வகையில் உள்ளது.
இந்தச் செயலை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு உண்மையான மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறது என்றால் இந்து ஆலயங்களில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்க வேண்டும்.
இல்லையெனில் மக்களின் மிகுந்த வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்று இந்து முன்னணி எச்சரிக்கிறது."
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.