வால்பாறை அருகே தோட்ட தொழிலாளர்கள் மேல் நிறுவை செட் விழுந்ததால் காயம்... மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி..!

கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. மழையால் தேயிலை எடை போடும் நிறுவை செட் விழுந்து ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: வால்பாறையில் கனமழை பெய்து வருகிறது. மழையால் தேயிலை எடை போடும் நிறுவை செட் விழுந்து ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வந்தது. சில தினங்களாக கன மழையாக மாறி வருகிறது. வால்பாறையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த கனமழையால் பொது மக்களும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் N C பிரிவு 35-வது தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் 20-க்கு மேற்பட்டவர்கள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று மாலை மூன்று மணி அளவில் தேயிலை இலைகளை ஒரு செட்டில் எடை போட்டுக் கொண்டு இருக்கும் பொழுது செட்டு உடைந்து விழுந்ததில் ஐந்து பேரின் தலை, கை, கால் போன்றவைகள் மேல் ஓடுகள் மரங்கள் விழுந்ததால் காயமடைந்தனர்.



பின், எஸ்டேட் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்து மருத்துவமனையிலிருந்து அவசர ஊர்தி வரவழைத்து சுஜாதா, பேபி, எமிமா, சாந்தி, ரேஜிதா ஆகிய ஐந்து பேரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.



தலை, கை, கால் போன்ற இடங்களில் காயம் ஏற்பட்ட இடத்தில் அதற்கு தையல் போட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.



வால்பாறை பகுதிகளில் கன மழை காலங்களில் எஸ்டேட் நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...