தமிழக அரசின் சலுகைகள்: குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு அளிக்க கோவை காட்மா சங்கம் வேண்டுகோள்!

கோவை: குறு மற்றும்‌ சிறு தொழில்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ பாதுகாக்கும்‌ விதமாக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும், ஏற்கனவே தொழில்‌ துவங்கி, நடத்திக்கொண்டிருக்கும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கும்‌ இச்சலுகைகளை அளித்து உதவ வேண்டும் என காட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: குறு மற்றும்‌ சிறு தொழில்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ பாதுகாக்கும்‌ விதமாக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது வரவேற்கத்தக்கது என்றும், ஏற்கனவே தொழில்‌ துவங்கி, நடத்திக்கொண்டிருக்கும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கும்‌ இச்சலுகைகளை அளித்து உதவ வேண்டும் என காட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் கூறியதாவது:-

"கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவினால்‌ பாதிக்கப்பட்டு கடும்‌ நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும்‌ குறு மற்றும்‌ சிறு தொழில்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ பாதுகாக்கும்‌ விதமாக இன்று (23.07.21) தமிழ்நாடு அரசால்‌ அறிவிக்கப்பட்டுள்ள சலுகை அறிவிப்புகளில்‌, புதிதாகத் தொழில்‌ துவங்கும்‌ தொழில்‌ முனைவோர்கள்‌, மாநில அரசுத்‌ துறைகளுக்கு ரூ 20 லட்சம்‌ மதிப்பிற்குக் குறைவாக தங்கள்‌ உற்பத்திப்‌ பொருட்களை விற்பனை செய்யும்‌ பொழுது, தங்களுக்கான முன்வைப்புத்‌ தொகை செலுத்துதல்‌, முன்‌ அனுபவம்‌ மற்றும்‌ கடந்த கால விற்று முதல்‌ ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற அறிவிப்புகளை காட்மா சங்கத்தின்‌ சார்பில்‌ வரவேற்கிறோம்‌.

அதே நேரத்தில்,‌ ஏற்கனவே தொழில்‌ துவங்கி, நடத்திக்கொண்டிருக்கும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கும்‌ இச்சலுகைகளை அளித்து உதவ வேண்டும்‌ என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்‌."

இவ்வாறு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...