திருப்பூர்: திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து பாசன திட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து பாசன திட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதாகவும், இவையே முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு சுற்று முறை தண்ணீர் கிடைத்து வருவதாகவும் இதில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை பெறுவதே விவசாயிகளுக்கு பெரும் வேதனையாக இருக்க கூடிய சூழ்நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்ல 650 கோடியில் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் அப்படி செல்லும் பட்சத்தில் கோவை திருப்பூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவற்றை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் மூலம் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருவதாகவும், இவையே முக்கிய நீராதாரமாக விளங்கி வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு சுற்று முறை தண்ணீர் கிடைத்து வருவதாகவும் இதில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை பெறுவதே விவசாயிகளுக்கு பெரும் வேதனையாக இருக்க கூடிய சூழ்நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்ல 650 கோடியில் திட்டம் ஆலோசனையில் இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது எனவும் அப்படி செல்லும் பட்சத்தில் கோவை திருப்பூர் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவற்றை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.