கோவை: தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனைக்கு வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை விற்பனைக்கு வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளர்கள் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கிணத்துக்கடவு பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், சிக்கலாம் பாளையம் மற்றும் பாரதி நகர்ப் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை மறைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடையில் மளிகை சாமான்களோடு போதை வஸ்துத்துகளை பதுக்கி வைத்திருந்த போது காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனையடுத்து, விற்பனைக்கு வைத்திருந்த போதை வஸ்துக்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர்கள் விஜயகுமார் மற்றும் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, கிணத்துக்கடவு பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், சிக்கலாம் பாளையம் மற்றும் பாரதி நகர்ப் பகுதியில் உள்ள மளிகைக் கடையில் தடைசெய்யப்பட்ட போதை வஸ்துக்களை மறைத்து வைத்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடையில் மளிகை சாமான்களோடு போதை வஸ்துத்துகளை பதுக்கி வைத்திருந்த போது காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதனையடுத்து, விற்பனைக்கு வைத்திருந்த போதை வஸ்துக்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் கடை உரிமையாளர்கள் விஜயகுமார் மற்றும் அருண்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.