கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு - ஆபத்தை உணராமல் மது போதையில் சாகசம் செய்யும் இளைஞர்கள்..!

கோவை: கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் மது போதையில் இளைஞர்கள் இறங்கி சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை சித்திரை சாவடி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தை உணராமல் மது போதையில் இளைஞர்கள் இறங்கி சாகசம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை குற்றலாம் மற்றும் சித்திரை சாவடி தடுப்பணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இந்த நிலையில், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சித்திரை சாவடி தடுப்பணையில் மது போதையில் இறங்கும் சில இளைஞர்கள் அதில் சாகசம் செய்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



தடுப்பணையில் இருந்து வெளியேறும் நீரின் வேகம் அதிகரித்துள்ள போதும், ஆபத்தை உணராமல் மது போதையில் இரண்டு இளைஞர்கள் சாகசம் செய்த போது ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். மற்றொரு இளைஞர் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளது.

இதேபோல், மது போதையில் இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான சாகசங்களை செய்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, உடனடியாக அங்கு காவல் துறையினர் அல்லது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வெள்ளப்பெருக்கு நேரத்தில், தடுப்பணை நீர் பாதையில் இறங்குவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...