கோவையில் வீட்டில் தனியாக உள்ள முதியவர்களை குறிவைத்து கொள்ளை!

கோவை: கோவையில் வீட்டில் தனிமையிலிருந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் அறை கதவை பூட்டிவிட்டு மனைவியிடம் 12-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் வீட்டில் தனிமையிலிருந்தஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் அறை கதவை பூட்டிவிட்டு மனைவியிடம் 12-பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை தொண்டாமுத்தூரை அடுத்த புத்தூர் ரோட்டில் உள்ள விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (78). இவர் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் நேர்முக உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு ரத்தினம் (73), என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

மகன் திருமணம் முடிந்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பிறகு குணமடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள இரண்டு அறைகளில் கணவனும், மனைவியும் தனித்தனியாகத் தனிமையில் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் உணவருந்தி விட்டு அறைக்கு தூங்க சென்றனர். இதைப் பயன்படுத்தி வீட்டின் பின்புறமாக கொள்ளையர்கள் நுழைந்து சமையலறை வழியாக உள்ளே வந்தனர். ராமசாமி எழுந்து விடக்கூடாது என்பதற்காக அவருடைய அறையில் வெளிக் கதவைப் பூட்டியுள்ளனர்.

பிறகு அவருடைய மனைவி ரத்தினம் அறைக்குச் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 4-பவுன் செயின் மற்றும் பீரோவிலிருந்த 8-பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதனையடுத்து, மனைவி ரத்தினம் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது தன்னுடைய அறை கதவு பூட்டப் பட்டிருப்பது ராமசாமிக்கு தெரிந்தது.

பின்னர் திருடர்கள் சென்றதும் மனைவி அறை கதவை திறந்தார். உடனே இரண்டு பேரும் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டு மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனியாக இருந்த முதியவர்களிடம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...