கைகொடுக்கும் 'ஆடி' காத்து: தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிப்பு!

கோவை: ஆடி மாதம் துவங்கி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிக்க துவங்கியுள்ளன.



கோவை: ஆடி மாதம் துவங்கி உள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது. தினசரி மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலைகள் பங்களிக்க துவங்கியுள்ளன.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு உள்ளன. ஆண்டுதோறும் மே கடைசியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும்.

இந்த ஆண்டு முன்கூட்டியே ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவங்கியது. தற்போது ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தினசரி உற்பத்தி செய்யப்படும் மின்சாரமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது:



கடந்த ஆண்டு சீசனில் 10,000 மில்லியன் யூனிட் காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கியது. 'ஆடி' மாதம் காற்றாலை உற்பத்தியில் 'பீக் சீசன்' ஆகும். தற்போது காற்றின் வேகம் அதிகம் காணப்படுவதால் தினமும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக நேற்றையதினம்(July 21) புதன்கிழமை, தமிழகத்தின் மொத்த மின் பயன்பாடு 309 மில்லியன் யூனிட். இதில் 101 மில்லியன் யூனிட் காற்றாலை மின்சாரம் பங்களிப்பு செய்துள்ளது.

தமிழக மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு காற்றாலை மின்சாரம் பங்களிக்க துவங்கி உள்ளன. எதிர் வரும் நாட்களில் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...