கோவை: கோவை திருமண்டல கூட்டத்தில் மோதல் சம்பவம் தொடர்பாக, சி.எஸ்.ஐ பாதிரியார் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கோவை: கோவை திருமண்டல கூட்டத்தில் மோதல் சம்பவம் தொடர்பாக, சி.எஸ்.ஐ பாதிரியார் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கோவை சி.எஸ்.ஐ, திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆலய போதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் தர்மபுரியைச் சேர்ந்த வக்கீல் நேச மெர்லின் (36), என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தாக்கப்பட்ட வழக்கில் நேச மெர்லின் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போதகர் சார்லஸ், சாம்ராஜ் அப்பாத்துரை, பாக்கிய ராஜ், பொன் ராஜ், டேனியல், பரமானந்தம், நெல்சன் ஆலய போதகர் வில்சன் குமார் 48, விஜய் மேட்டூர் ஜெயராஜ், ஜேக்கப், அருள் பிரவீன் உள்பட ஆகிய 15 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் கொலை மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நேசம் மெர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் போதகர் ஜெயின் பால் வில்சன் குமார் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சி.எஸ்.ஐ, திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆலய போதகர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை ரேஸ் கோர்ஸ்சில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற சி.எஸ்.ஐ திருமண்டல நிர்வாக குழு கூட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கடும் மோதலில் ஈடுபட்டனர். இதில் தர்மபுரியைச் சேர்ந்த வக்கீல் நேச மெர்லின் (36), என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதையடுத்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தாக்கப்பட்ட வழக்கில் நேச மெர்லின் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போதகர் சார்லஸ், சாம்ராஜ் அப்பாத்துரை, பாக்கிய ராஜ், பொன் ராஜ், டேனியல், பரமானந்தம், நெல்சன் ஆலய போதகர் வில்சன் குமார் 48, விஜய் மேட்டூர் ஜெயராஜ், ஜேக்கப், அருள் பிரவீன் உள்பட ஆகிய 15 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் கொலை மிரட்டல் தாக்குதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல சி.எஸ்.ஐ ஆலய செயலாளர் ஜேக்கப் ரேஸ்கோர்ஸ் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நேசம் மெர்லின் மற்றும் அமிர்தம் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் போதகர் ஜெயின் பால் வில்சன் குமார் என்பவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தாக தெரிகிறது. தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.