திருப்பூர்: நிலுவை தொகையை வழங்க கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: நிலுவை தொகையை வழங்க கோரி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகியும் தற்போது வரை தங்களுக்கான தொகையை வழங்கவில்லை என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், இது குறித்து ஏற்கனவே அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மற்றும் தேர்தல் பிரிவில் முறையிட்டும் நிலுவைத்தொகை கிடைக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு, தங்களுக்கான நிலுவை தொகையினை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காக்களிலும் ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகியும் தற்போது வரை தங்களுக்கான தொகையை வழங்கவில்லை என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், இது குறித்து ஏற்கனவே அந்தந்த தாலுகா அலுவலகங்கள் மற்றும் தேர்தல் பிரிவில் முறையிட்டும் நிலுவைத்தொகை கிடைக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு, தங்களுக்கான நிலுவை தொகையினை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.