கோவையில் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி - ஊராட்சி மன்ற தலைவருக்கு 2-நாள் காவல்!

கோவை: கடன் வாங்கி தருவதாக கூறி தனியார் மருத்துவமனை அதிபரிடம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடன் வாங்கி தருவதாக கூறி தனியார் மருத்துவமனை அதிபரிடம் ஊராட்சி மன்றதலைவர் உட்பட 2 -பேர் மோசடியில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை நீலம்பூர் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த மாதேஸ்வரன் மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

சுமார் 50 கோடி செலவில் மருத்துவமனை புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்மாதேஸ்வரன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த பன்னீர்செல்வம் 55, உட்பட 4 பேரைத் தொடர்பு கொண்டு பேசினர்.

இதனையடுத்து, மாதேஸ்வரன் நண்பர் ஒருவரின் மூலமாக இவர்களை தொடர்பு கொண்டதாக தெரிகிறது.

அப்போது அவர்கள் மருத்துவமனை விரிவாக்க பணிக்காக வங்கிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கடன் வாங்கித் தருவதாகவும், இதற்காக தங்களுக்கு 2.85 கோடி கமிஷன் தர வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்நிலையில், 2.85 கோடி கொடுத்த நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடன் வாங்கி தரவில்லை என கூறி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் மாதேஸ்வரன் புகார் செய்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் உள்படஇரண்டு பேரையும் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் 2 சொகுசு கார்கள், ராஜஸ்தான் மாநிலம் சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயரில் வங்கியில் பெறப்பட்டதாகவும், ரூபாய் 49.85, கோடி மற்றும் 49.95 கோடி 2 போலி வரைவு காசோலைகள் இருந்தன.

பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஊராட்சி தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி கடன் வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணைக்காக இரண்டு நாள் காவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர் மோசடியாக அபகரித்த பணத்தை மீட்கும் வகையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...