கோவையில் ரயில்வே அதிகாரியை இரும்பு கம்பியால் தாக்கிய பெண்!

கோவை: கோவையில் ரயில்வே அதிகாரியைத் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் ரயில்வே அதிகாரியைத் தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை போத்தனூர் மேட்டூர் பகுதியை சேர்ந்த அழகு கலை நிபுணர் கல்பனா, இவர் தனது வீட்டில் நான்கு நாய்கள் வைத்து வளர்த்து வருகிறார்.

அவற்றை அடிக்கடி வெளியில் விட்டு விடுவதாகத் தெரிகிறது. இதனால் அந்த நாய்கள் சாலையில் வருபவர்களை கண்டு குறைத்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கல்பனாவிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அந்த பகுதி மக்கள் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்பனாவைக் கண்டித்தநிலையில், ஆத்திரமடைந்த கல்பனா வீட்டின் முன்பு நின்று பொதுமக்களுக்கு இடையூறாகச் சத்தம் போட்டுள்ளார்.

இதனைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அதிகாரியான ஜெய்சங்கர் 64, அவரைக் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த கல்பனா அங்கு இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெய்சங்கரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஜெய்சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜெய்சங்கர் போலீசில் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...