கோவையில் மெல்ல மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

உடல் நலக்குறைவால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்த, தமிழக மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெட்ரோல் பங்குகள் தொடங்கி சிறு உணவகம் கூட பூட்டிக்கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். கோவையில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அசாதாரணமான சூழல் ஏற்படவில்லை. 





இந்த நிலையில், நேற்று மாலையே சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கத் தொடங்கினர். இன்று அதிகாலையிலே பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்ல தொடங்கினர். சில வியாபர நிறுவனங்கள் தவிர பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மளிகை கடைகள் உட்பட பல்வேறு கடைகள்  திறக்கப்பட்டன. 



கோவை சுங்கம் பஸ்டிப்போவில் இருக்கும் பேருந்துகள்பாதிக்கு மேல் இயங்க ஆரம்பித்துவிட்டதாக டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.மெல்ல மெல்ல கோவை மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.       

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...