வால்பாறையில் பெருகி வரும் சிறுத்தை நடமாட்டம்! அதிகாரிகள் ஆய்வு!

கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் உள்ள காமராஜ் நகர், கக்கன் காலனி, சிறுவர் பூங்கா, அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும் சிறுத்தைகள் கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் வால்பாறையின் மத்திய பகுதியான காந்தி சிலை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் 3 சிறுத்தைகள் நடமாடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதையடுத்து, ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் ஐ.எப்.எஸ், உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனத்துறை மருத்துவர் மனோகரன், ஆனையாளர் ரமேஷ், வட்டாட்சியர் ராஜா, வனச்சரகர், வானவர்கள் வனத்துறையினர் சிறுத்தைகள் நடமாடிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...