வால்பாறையில் மந்த கதியில் நடைபெறும் தாவரவியல் பூங்கா பணிகள் - வியாபாரிகள் அதிருப்தி!

கோவை: வால்பாறையில் தாவரவியல் பூங்கா பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் தாவரவியல் பூங்கா பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வந்தனர். பணிச்சுமை, குறைவான சம்பளம் மற்றும் வனவிலங்குகள் தாக்குதல் போன்ற காரணங்களால் ஏராளமான தொழிலாளர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கீழ்ப்பகுதிக்கு சென்றுவிட்டார்கள்.

இதன் காரணமாக வால்பாறையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எட்டியது. இந்நிலையில், வால்பாறை ஒரு மலைப் பிரதேசம் என்பதாலும் இயற்கை காட்சிகள் அதிகம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருகை சிறிது இருந்து வந்தது.

இந்த நிலையில், வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக வால்பாறையில் உள்ள சாலைகள் அனைத்தும் இருவழிச் சாலைகளாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சுற்றுலா பயணிகளுக்காக படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன.



கடந்த இரண்டு ஆண்டுகளாக தாவரவியல் பூங்கா பணிகள் நடைபெற்று வந்தாலும் தற்போது பணிகள் மிகவும் மந்த நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.



வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க தாவரவியல் பூங்காவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென வியாபாரிகள் நகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...