கோவை: பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.
கோவை: பெட்ரோலியப் பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில், எப்போதும் இல்லாத அளவிற்குப் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளது சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக அவையின் இதர அலுவல்களை ஒத்தி வைத்திட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.
இதனிடையே, சபாநாயகருக்குபி.ஆர்.நடராஜன் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் பின்வருமாறு:
"கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும், கலால் வரிகளை உயர்த்தி இவ்வாறு பெட்ரோலியப் பொருள்கள் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
“நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு, சாமானிய மக்கள் கடும் துன்பங்களுங்ககு ஆளாகியுள்ளார்கள்.
இவ்வாறு மிகப்பெரிய அளவில் வரிச் சூறையாடல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில்பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில், எப்போதும் இல்லாத அளவிற்குப் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளது சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக அவையின் இதர அலுவல்களை ஒத்தி வைத்திட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது.
இதனிடையே, சபாநாயகருக்குபி.ஆர்.நடராஜன் கொடுத்துள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் பின்வருமாறு:
"கடந்த இருபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும், கலால் வரிகளை உயர்த்தி இவ்வாறு பெட்ரோலியப் பொருள்கள் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.
“நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டு, சாமானிய மக்கள் கடும் துன்பங்களுங்ககு ஆளாகியுள்ளார்கள்.
இவ்வாறு மிகப்பெரிய அளவில் வரிச் சூறையாடல் மேற்கொள்ளப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில்பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.