மேட்டுப்பாளையம் பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது!

கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாயகத்தின் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங் அறிவுரையின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் செல்வநாயகம் முருகேசன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஊமப்பாளையம் பகுதியில் நேற்று திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் சமூக விரோத செயல்களான மது, சூதாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்,

மதுவிலக்கு வழக்குகள்

மொத்த வழக்குகள் : 5

கைது செய்யப்பட்ட எதிரிகள் : 6

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம் :129 மது பாட்டில்கள்

கஞ்சா வழக்கு

மொத்த வழக்குகள் : 02

கைது செய்யப்பட்ட எதிரிகள் : 4

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : 1.900 கிலோ கிராம்

சூதாட்ட வழக்குகள்

மொத்த வழக்குகள் : 01

கைது செய்யப்பட்ட எதிரிகள் : 04

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : ரூ.800/-

புகையிலை வழக்குகள்

மொத்த வழக்குகள்: 03

கைது செய்யப்பட்ட எதிரிகள்: 06

பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம்: 37 புகையிலை பாக்கெட். மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...