தமிழக முதல்வரின் மறைவையொட்டி கோவையில் கண்ணீர் அஞ்சலி!


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று இரவு (டிச. 6) சுமார் 11.30 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.



கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெருட்சோடியே காணப்படுகின்றது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பெரும்பாலான அலுவலகங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் போக்குவரத்து குறைவாகவே காணப்படுகிறது. சிறிய மள்ளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இருப்பினும் அத்யாவசியத் தேவைகளான மருந்துக் கடை, பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ் ஆகியவை செயல்பட்டு வருகிறது.



இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை விரைந்தனர். மாவட்டங்களின் பல பகுதிகளிலும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு உயிரிழந்த தமிழக முதல்வருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், காந்திபுர பேருந்து நிலையத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஜெயலலிதாவின் உயிரிழப்பையொட்டி ஒப்பாரிவைத்து அஞ்சலி செலுத்திவந்த நிலையில் இரண்டு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்ட மற்ற அதிமுக-வினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.



Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...