இறந்த தன் கணவரின் சம்பளம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை மீட்டுத்தர திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி கோரிக்கை..!

திருப்பூர்: லாரி ஓட்டுநரான தன் கணவர் இறந்தவிட்ட நிலையில், அவருக்கு சேரவேண்டிய சம்பளத் தொகையும் இழப்பீட்டுத் தொகையும் விரைந்து பெற்றுத் தருமாறு, இறந்த லாரி ஓட்டுநரின் மனைவி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: லாரி ஓட்டுநரான தன் கணவர் இறந்தவிட்ட நிலையில், அவருக்கு சேரவேண்டிய சம்பளத் தொகையும் இழப்பீட்டுத் தொகையும் விரைந்து பெற்றுத் தருமாறு, இறந்த லாரி ஓட்டுநரின் மனைவி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரது கணவர் குப்புசாமி கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தான் பணிபுரியும் நிறுவனத்திற்காக லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். ஜெய்ப்பூர் சென்ற அவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உடலை மட்டும் மனைவியிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். அதன் பிறகு அவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காத நிலையில், கணவர் வேலை பார்த்த நிலுவை சம்பளத் தொகையும், இழப்பீடு தொகையும் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், அவற்றையும் வழங்காததால் ஏழ்மை நிலையில் தனது கணவரின் தாய் மற்றும் குழந்தைகளை வைத்து வாழ முடியாத சூழலில் இருப்பதால், உடனடியாக நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வரவேண்டிய தொகையை மீட்டுத் தர வேண்டும் என வலியுறுத்தி லட்சுமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...