கோவை: கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பால், பொதுமக்கள் இனி குறுக்கே பாய்ந்து தடுப்பை மீறி செல்ல முடியாது.
கோவை: கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு கருதி திடீரென உருவான சிமெண்டு தடுப்பால், பொதுமக்கள் இனி குறுக்கே பாய்ந்து தடுப்பை மீறி செல்ல முடியாது.
கோவை காந்திபுரம் சிக்னல் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்கள் இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் டவுன் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய உடன் உடனடியாக வெளியூருக்கு செல்ல பேருந்துகளை பிடிப்பதற்காக குறுக்கு வழியில் தடுப்பு இரும்பு தகடுகளை விலக்கிவிட்டு ஏறி குதித்து திருவள்ளுவர் பேருந்தை அடைந்து வந்தனர். எதையோ சாதித்தது போல பஸ்ஸில் ஏறி பயணித்து வந்தனர். அதனால், அந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதுகுறித்து, பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன. இந்த நிலையில், இன்று திடீரென காந்திபுரம் சிக்னலில் இருந்து டவுன் பேருந்து நிலையத்தின் பின்புறம் வரை சிமெண்ட் தளம் உருவாக்கப்பட்டு அதன் மீது கருப்பு வெள்ளை பெயின்ட்டும் அடிக்கப்பட்டது. ஆதலால், அந்தப் பகுதியில் மக்கள் ஏறி குதித்து வெளியூருக்கு செல்ல முடியாது. இனி முறைப்படி சாலை விதியை மதித்து செல்ல வேண்டும். ஆதலால், விபத்துகள் குறையும் என சமூக ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் சிக்னல் அருகே திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்கள் இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் டவுன் பேருந்து நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய உடன் உடனடியாக வெளியூருக்கு செல்ல பேருந்துகளை பிடிப்பதற்காக குறுக்கு வழியில் தடுப்பு இரும்பு தகடுகளை விலக்கிவிட்டு ஏறி குதித்து திருவள்ளுவர் பேருந்தை அடைந்து வந்தனர். எதையோ சாதித்தது போல பஸ்ஸில் ஏறி பயணித்து வந்தனர். அதனால், அந்த ரோட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதுகுறித்து, பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன. இந்த நிலையில், இன்று திடீரென காந்திபுரம் சிக்னலில் இருந்து டவுன் பேருந்து நிலையத்தின் பின்புறம் வரை சிமெண்ட் தளம் உருவாக்கப்பட்டு அதன் மீது கருப்பு வெள்ளை பெயின்ட்டும் அடிக்கப்பட்டது. ஆதலால், அந்தப் பகுதியில் மக்கள் ஏறி குதித்து வெளியூருக்கு செல்ல முடியாது. இனி முறைப்படி சாலை விதியை மதித்து செல்ல வேண்டும். ஆதலால், விபத்துகள் குறையும் என சமூக ஆர்வலர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.