கோவை மாநகராட்சியால் வைக்கப்பட்ட தண்ணீர் இன்றி அசுத்தமாகக்கிடக்கும் ஹைடெக் கழிப்பறையை சுத்தப்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை..!

கோவை: கோவை மாநகராட்சியால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வைக்கப்பட்ட ஹைடெக் கழிப்பறை தண்ணீர் இல்லாமல் அசுத்தமாகக் கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்குரிய வகையில் சுத்தப்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சியால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு வைக்கப்பட்ட ஹைடெக் கழிப்பறை தண்ணீர் இல்லாமல் அசுத்தமாகக் கிடக்கிறது. இதனை பயன்பாட்டுக்குரிய வகையில் சுத்தப்படுத்தித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் மாநகராட்சி சார்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச ஹைடெக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட நவீன கழிப்பிடம் உள்ளது. ஆனால், இதை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு படு மோசமான நிலையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் கேட்டபோது, ‘‘தொட்டியில் ஏற்றுவதற்கு தண்ணீர் போதிய அளவு கிடைப்பது கிடையாது. அதனால் நாங்களும் அதை துப்புரவுப்படுத்துவதும் கிடையாது. இதைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நல்ல தண்ணீரை மட்டுமே மேலே ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இப்படி பயன்படுத்தப்படாமல் பாழடைந்து கிடப்பது எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது'' என தெரிவித்தனர்.

உடனே மாநகராட்சி தலையிட்டு, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்காக தினம்தோறும் தொட்டியில் தண்ணீரை நிரப்பி சுத்தம் செய்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...