கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ராணியில் இந்திய சுதந்திரத்தின் பவள விழா மற்றும் ஸ்வர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
கோவை: கோவை ஐ.என்.எஸ் அக்ராணியில் இந்திய சுதந்திரத்தின் பவள விழா மற்றும் ஸ்வர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்தின் மகா உற்சவம் மற்றும் சுவர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டத்தின் அங்கமாக கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பட்டறை ஜூலை 17 அன்று நடத்தப்பட்டது. தூய்மையை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல், குறிப்பாக நடைமுறையிலுள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு சுகாதாரமான சுற்றுச்சூழலை பராமரித்தல் வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

1971 - இல் இந்தோ - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளில் அடைந்த வெற்றியின் 50 வது ஆண்டு நினைவாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவ்வாய்ப்பினை ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவின் தேவையை வலியுறுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மூன்று திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை ஐ.என்.எஸ் அக்ராணியின் கட்டளை அதிகாரி வி.எஸ்.எம் கமடோர் அசோக் ராய் அவர்கள், கடற்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டளை அதிகாரி அக்ராணி நிர்வாகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதன் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சமூக வாழ்விலும் பல பசுமை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் கடற்படை சமூகத்தின் தாக்கம் கடற்படை சுற்றுச்சூழலை தூய்மையாகப் பராமரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்து, அனைத்து கடற்படை பணியாளர்களிடமும் பெருமை உணர்வை ஏற்படுத்தியது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இத்துடன் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக நேவி குழந்தைகள் பள்ளியில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மைல்கற்கள் என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி சிறப்பித்தனர்.
இந்திய சுதந்திரத்தின் மகா உற்சவம் மற்றும் சுவர்ணிம் விஜய் ஆண்டு நினைவு கொண்டாட்டத்தின் அங்கமாக கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான பட்டறை ஜூலை 17 அன்று நடத்தப்பட்டது. தூய்மையை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்துதல், குறிப்பாக நடைமுறையிலுள்ள கொரோனா பெருந்தொற்று காலத்தில் எவ்வாறு சுகாதாரமான சுற்றுச்சூழலை பராமரித்தல் வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
1971 - இல் இந்தோ - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளில் அடைந்த வெற்றியின் 50 வது ஆண்டு நினைவாக இந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இவ்வாய்ப்பினை ஆரோக்கியமான மற்றும் வலிமையான இந்தியாவின் தேவையை வலியுறுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மூன்று திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்களை ஐ.என்.எஸ் அக்ராணியின் கட்டளை அதிகாரி வி.எஸ்.எம் கமடோர் அசோக் ராய் அவர்கள், கடற்படைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கட்டளை அதிகாரி அக்ராணி நிர்வாகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அதன் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் சமூக வாழ்விலும் பல பசுமை முயற்சிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில் கடற்படை சமூகத்தின் தாக்கம் கடற்படை சுற்றுச்சூழலை தூய்மையாகப் பராமரிப்பதற்கு தூண்டுதலாக அமைந்து, அனைத்து கடற்படை பணியாளர்களிடமும் பெருமை உணர்வை ஏற்படுத்தியது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இத்துடன் இந்நிகழ்வின் ஓர் அங்கமாக நேவி குழந்தைகள் பள்ளியில் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மைல்கற்கள் என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி சிறப்பித்தனர்.