கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக கணிசமாக உயர்ந்துள்ளது.
கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 26 அடியாக கணிசமாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த வாரத்தில் 24 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம், தொடர் மழையால் நேற்று 26அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்யும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது' என்றார்.
கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டமானது, படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த வாரத்தில் 24 அடியாக இருந்த சிறுவாணி அணையின் நீர்மட்டம், தொடர் மழையால் நேற்று 26அடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்மழை பெய்யும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணை முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது' என்றார்.