கோவையின் சுற்றுப்புறப் பகுதிகளில் மயில்கள் அதிகம் உள்ளன. இறை தேடி தோட்டங்களுக்கு வருகின்ற மயில்களில் பல்லடம் அருகே 19 மயில்கள் பலியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: கோவையின் சுற்றுப்புறப் பகுதிகளில் மயில்கள் அதிகம் உள்ளன. இறை தேடி தோட்டங்களுக்கு வருகின்ற மயில்களில் பல்லடம் அருகே 19 மயில்கள் பலியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மற்றும் அருகே உள்ள சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இந்திய தேசியப் பறவையான மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை மாலை நேரங்களில் இறை தேடி தோட்டங்களுக்கு வருவது வழக்கம். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று 19 மயில்கள் இறந்து கிடந்தன. இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயில்களை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதில் மயில்களை விஷம் வைத்துக் கொல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. அதனால் தோட்டத்தின் உரிமையாளரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி, வலசுபாளையம் - நாச்சியார் தோட்டம் பகுதியில், மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(65), என்பவரின் தோட்டத்தில், 19 மயில்கள் இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது என்பதை, உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், கால்நடை மருத்துவர் அறிவுச்செல்வன் உறுதி செய்தார். வன அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், 'தோட்டத்துக்கு வரும் மயில்கள், பாத்திகளை சேதப்படுத்தியுள்ளன. கோபமடைந்த விவசாயி பழனிசாமி அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட, 12 பெண், மற்றும் ஏழு ஆண் மயில்கள் உயிரிழந்தன. பழனிசாமியை கைது செய்து விசாரிக்கிறோம்' என்றார். கடந்த வாரம், திருப்பூர் அருகே முத்தணம்பாளையத்தில், 24 மயில்கள் இறந்தன. தற்போது பல்லடம் வட்டாரத்தில், 19 மயில்கள் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மற்றும் அருகே உள்ள சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இந்திய தேசியப் பறவையான மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. அவை மாலை நேரங்களில் இறை தேடி தோட்டங்களுக்கு வருவது வழக்கம். இந்தநிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று 19 மயில்கள் இறந்து கிடந்தன. இந்தத் தகவல் கேள்விப்பட்டதும் வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயில்களை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதில் மயில்களை விஷம் வைத்துக் கொல்லப்பட்ட தகவல் தெரிய வந்தது. அதனால் தோட்டத்தின் உரிமையாளரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி, வலசுபாளையம் - நாச்சியார் தோட்டம் பகுதியில், மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி(65), என்பவரின் தோட்டத்தில், 19 மயில்கள் இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டது என்பதை, உடற்கூறு ஆய்வின் அடிப்படையில், கால்நடை மருத்துவர் அறிவுச்செல்வன் உறுதி செய்தார். வன அலுவலர் காசிலிங்கம் கூறுகையில், 'தோட்டத்துக்கு வரும் மயில்கள், பாத்திகளை சேதப்படுத்தியுள்ளன. கோபமடைந்த விவசாயி பழனிசாமி அரிசியுடன் விஷமருந்து கலந்து வைத்துள்ளார். அதை சாப்பிட்ட, 12 பெண், மற்றும் ஏழு ஆண் மயில்கள் உயிரிழந்தன. பழனிசாமியை கைது செய்து விசாரிக்கிறோம்' என்றார். கடந்த வாரம், திருப்பூர் அருகே முத்தணம்பாளையத்தில், 24 மயில்கள் இறந்தன. தற்போது பல்லடம் வட்டாரத்தில், 19 மயில்கள் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.