கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலா வரும் சிறுத்தைகளைக் கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலா வரும் சிறுத்தைகளைக் கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. வால்பாறை நகரை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இரு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இருப்பினும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் வால்பாறை மத்திய பகுதியான காந்தி சிலை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் சிறுத்தைகள் நடமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து வால்பாறை வனச் சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இரு கேட்டிலும் முன்புறம் உள்ள படிக்கட்டு பகுதிகளிலும் 3 நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகமாக உள்ளது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வால்பாறை நகரில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த சில வாரங்களாக கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டு இருந்தது. வால்பாறை நகரை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் பகுதியில் இரு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இருப்பினும், சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது. இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் வால்பாறை மத்திய பகுதியான காந்தி சிலை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம் சிறுத்தைகள் நடமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது இதைத்தொடர்ந்து வால்பாறை வனச் சரகத்தைச் சேர்ந்த வனத்துறையினர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய இரு கேட்டிலும் முன்புறம் உள்ள படிக்கட்டு பகுதிகளிலும் 3 நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இதன்மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.