திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகரில் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்த ஊக்குவிப்பு முகாமில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தலைமையுரை வழங்கினார். இந்த முகாமில் சுமார் 150 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இந்த ஊக்குவிப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்தும், இவர்கள் சமுதாயத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க தொழில் வாய்ப்புகள் குறித்தும் காவல் துறை மூலமாக சமுதாயத்தில் நல்லமுறையில் வாழ வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் சுமார் 30 திருநங்கைகளுக்கு தங்களது நிறுவனத்தில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கும் உதவி செய்யப்பட்டது. இந்நிகழ்வில், காவல்துறை ஆணையர் அரவிந்த் உள்ளிட்ட காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகரில் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்த ஊக்குவிப்பு முகாமில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தலைமையுரை வழங்கினார். இந்த முகாமில் சுமார் 150 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இந்த ஊக்குவிப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்தும், இவர்கள் சமுதாயத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க தொழில் வாய்ப்புகள் குறித்தும் காவல் துறை மூலமாக சமுதாயத்தில் நல்லமுறையில் வாழ வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் சுமார் 30 திருநங்கைகளுக்கு தங்களது நிறுவனத்தில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கும் உதவி செய்யப்பட்டது. இந்நிகழ்வில், காவல்துறை ஆணையர் அரவிந்த் உள்ளிட்ட காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.