கோவை: நீண்ட நாட்களுக்குப்பின் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: நீண்ட நாட்களுக்குப்பின் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், சிற்றாறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் அணைகளை பார்வையிட்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கொரானா தொற்றின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இதன் காரணமாக, வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்திருந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு பசுமை போர்த்திய தேயிலைத் தோட்டங்கள், சிற்றாறுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் மற்றும் அணைகளை பார்வையிட்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கொரானா தொற்றின் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரானா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததையடுத்து தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
இதன் காரணமாக, வால்பாறை பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர். வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்திருந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.