திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்கள் இன்றி குடியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா (28). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பின்புறம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அதே பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா என்பது தெரியவந்தது. அவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை திருமுருகன்பூண்டி காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா (28). இவர் திருப்பூர் பாண்டியன் நகர் பின்புறம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அதே பகுதியில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வங்கதேச நாட்டை சேர்ந்த நவஹாலே மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சொஹல் ராணா என்பது தெரியவந்தது. அவர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பராகனாஸ் மாவட்ட முகவரி போலியானது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை திருமுருகன்பூண்டி காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த பிற நபர்கள் யாரேனும் தங்கியிருந்தார்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.