கோவை: பக்ரீத் பண்டிகை எதிரொலியாக பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ஒரே நாளில் இரண்டு கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, ஒரே நாளில் இரண்டு கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடைபெற்றது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட்டு சந்தை, வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழை பெய்தாலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
இதனையடுத்து, மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, மொத்தம் 1,500 மாடுகள் வரத்து இருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நாட்டு காளை, 50 - 55 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 30 - 35 ஆயிரம்; நாட்டு எருமை, 40 - 45 ஆயிரம்; முரா, 55 - 60 ஆயிரம்; ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம், இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாட்டு சந்தை, வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மழை பெய்தாலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
இதனையடுத்து, மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, மொத்தம் 1,500 மாடுகள் வரத்து இருந்தது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நாட்டு காளை, 50 - 55 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 30 - 35 ஆயிரம்; நாட்டு எருமை, 40 - 45 ஆயிரம்; முரா, 55 - 60 ஆயிரம்; ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மொத்தம், இரண்டு கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.