கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளிக்கு கத்திக்குத்து... வாலிபர் கைது..!

கோவை: கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பகுதியில் தகராறு முற்றிய நிலையில் கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து வாலிபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை: கிணத்துக்கடவு சென்றான்பாளையம் பகுதியில் தகராறு முற்றிய நிலையில் கூலித் தொழிலாளியை வாலிபர் கத்தியால் குத்தினார். இதனைத் தொடர்ந்து வாலிபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றான்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(வயது 23) கூலி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், கடந்த 13-ஆம் தேதி சென்றாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிவக்குமார் என்ற வாலிபருக்கும் கூலி தொழிலாளியான பிரபுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இருவரையும் பிரபுவின் பெற்றோர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதன்பிறகு, கடந்த 15ஆம் தேதி மதியம் சென்றாம்பாளையம் பகுதியில் உள்ள கழிப்பிடம் அருகே மீண்டும் சிவகுமார் பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபுவை சிவகுமார் முதுகில் குத்தினார். இதனால், காயமடைந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் கத்தியால் குத்திய சிவகுமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...