கோவை: கோவையில் தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிக்கொண்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று C A J வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் தொடர்ந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிக்கொண்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று C A J வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக C A J வெல்ஃபேர் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதமாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
கோவையில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஜமேஷ தர்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவிப்பு செய்துள்ளது. காவல்துறை உடனடியாக இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
கோவையில் 300 வருடங்கள் பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள தர்காவுக்கு அனைத்து ஆவணங்களும் உள்ளது. பெரிய கடைவீதியில் தற்போது உள்ள சாலை அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமானது. மக்கள் பயன்பாட்டிற்கு அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்துக்கு அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வழங்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
வரலாறு தெரியாமல் அவர்கள் தற்போது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் கோவை மாநகர காவல்துறை, தமிழக அரசும் இவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக C A J வெல்ஃபேர் அசோசியேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோவையில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் விதமாக இந்து முன்னணி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
கோவையில் உள்ள அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள ஜமேஷ தர்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அறிவிப்பு செய்துள்ளது. காவல்துறை உடனடியாக இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
கோவையில் 300 வருடங்கள் பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான பெரிய கடை வீதியில் அமைந்துள்ள தர்காவுக்கு அனைத்து ஆவணங்களும் உள்ளது. பெரிய கடைவீதியில் தற்போது உள்ள சாலை அத்தார் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமானது. மக்கள் பயன்பாட்டிற்கு அன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்துக்கு அத்தர் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வழங்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
வரலாறு தெரியாமல் அவர்கள் தற்போது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் கோவை மாநகர காவல்துறை, தமிழக அரசும் இவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.