தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ - மாணவிகளை மு.க.ஸ்டாலின் குழப்புகிறார் - பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றச்சாட்டு!

கோவை: தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ-மாணவிகளை மு க ஸ்டாலின் குழப்புவதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை: தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ-மாணவிகளை மு க ஸ்டாலின் குழப்புவதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்படாமல் இருந்தது.



தற்போது கொரோனோ பரவல் குறைந்து வருவதால் இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மு க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தேர்வு உண்டு அல்லது இல்லை என்று சொல்லாமல் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் குழப்பிக் கொண்டே இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...