தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் சுகாதார மையம் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தொழு நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள் சுமார் 125 குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு கோவை வடவள்ளி அருகே கடந்த 40 வருடமாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு உதவி செய்யும் வகையில் கிராம சமூக சுகாதார மையம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அந்த மையத்தின் மூலமாக எங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு வசதி அனைத்தும் தற்போது வரை செய்துவருகிறார்கள்.

தற்போது எங்களுக்கு உதவி செய்யும் சுகாதார மையத்தின் மீது வி.சியாம் என்பவர் தவறான வதந்திகளை செய்தி பத்திரிகையிலும் மற்றும் சமூக வலைதளத்திலும் பரப்பி உள்ளார். இதனால், 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, சியாம் மீதும், அந்த செய்தி பத்திரிகை நிருபர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...